கொல்லிமலைக்கு ஆபத்து

சங்ககால கடைஏழு வள்ளல்களில் ஒருவர் வல்லில் ஓரி. இவர் ஆண்ட கொல்லிமலை இன்றும் பசுமை மாறாமல் இருக்கிறது. அந்த பசுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது சிலரின் செயல்.  வனத்துறைக்கு சொந்தமான மூலிகை வனத்திற்கு சென்று பார்த்தால், அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது அந்த வனத்தை பாதிக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இது போல் தொடர்ந்து பிளாஸ்டிக்கை அனுமதித்தால் வரும் காலத்தில் கொல்லிமலை பிளாஸ்டிக் மலையாகத்ததாக் காட்சிதரும்.  பிளாஸ்டிக் மட்டுமின்றி மதுபுட்டிகளும் தாறுமாறாக கிடக்கிறது. வார விடுமுறை என்றால் மதுபாட்டிலுடன் வரும் நபர்கள் மதுபுட்டிகளை உடைத்து சிதறடித்து வேறு சென்றுவிடுகிறார்கள். இது அங்கு வரும் வனஉயிரினமான குரங்குகளுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பிரயாணிகளுக்கும் சங்கடமாக உள்ளது.

வனதுறை நடவடிக்கை எடுக்குமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக