கடவுளர்கள் ஜாக்கிரதை

நம்மாளுங்க எதையும் விட்டு வைக்க மாட்டாங்க போல, மரத்துல பிள்ளையார் உருவம் இருந்தா அந்த மரத்தோட பேர வச்சி அப்படியே பிள்ளையார்னு போட்டிடுவாங்க.

இப்ப மருத மரத்துல அந்த உருவம் இருந்தா அது மருதமரத்து பிள்ளையார், வேங்கை மரத்துல இருந்தா வேங்கைபிள்ளையார், இப்படி மரத்தையும் மத்த கல்லையும் மரியாதையுடன் பார்க்கும் இந்த மக்கள்,

மனிதர்களையும் விலங்குகளையும் பார்ப்பதில்லை,
மிக முக்கியமாக மனிதர்களை பார்பபது இல்லை.

அப்படியிருந்தால் மூலைக்கு மூலை இப்படிபட்ட கடவுளர்கள் தான் இருப்பார்கள்.

முன்பெல்லாம் மூலைக்கு மூலை டெலிபோன் பூத் இருந்தகாலம் மலையேறிவிட்டது என்றாலும் இந்த கடவுளர்கள் தான் மூலைக்குமூலை இருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இவரின் பேரை சொல்லி நடத்தும் நாடகங்களும், காசு பார்க்கும் கூட்டமும் அதிகமாகிவிட்டது.

கடவுளர்களே பத்திரம், பத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக