ஓரி தலைநகரின் நிலை

 கடைஏழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் தேர்ச்சி பெற்று யாராலும் வெல்ல முடியாத அரசராக இருந்தார் ஓரி.

அப்படி பட்ட ஓரியின் புகழ்பெற்ற தலைநகரம் இருந்த இடம் அரியூர்நாடு.

இன்று அது அரியூர் கஸ்பா என்ற பெயரில் இருக்கிறது.

இந்த தகவலை அங்குள்ள ஒரு வயதானவர் சொல்ல கேட்டேன்.

இன்று பல வசதிகளும் இல்லாமல், அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கிவைப்பதாக அந்த வயோதிகரின் கருத்து.

உண்மையில் அங்கு சாலைவசதி இல்லை, இன்னமும் முன்னேற்றங்கள் அங்கு செல்லவில்லை.  பனங்காட்டுபட்டியில் இருந்து பெரியண்ணசாமி மலைக்கு செல்லும் சாலை மட்டும் உள்ளது. இது பக்கவழி பாதையாக இருக்கிறது. அங்குள்ள பள்ளிக்கு கூட வசதி குறைவு தான்.  அடிப்படை தேவைகளை மக்களுக்கு இன்னமும் சரிவர கிடைப்பதில்லை என்பது அந்த மக்களின் வருத்தம்.

இந்த மலையில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்பதால் தண்ணீரை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை.

எது எப்படியானாலும், தமிழர்களின் வீரத்திற்கும், நாகரீகத்திற்கும், கொடைக்கும் எடுத்துக்காட்டாக சொல்லும் இந்த வல்வில் ஓரியின் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

ஓரி ஆண்ட மலையின் தலைநகரான இந்த இடம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஓரியின் தலைநகர் மட்டும் அழிவைநோக்கி போகவில்லை, நம் வீரமும், நாகரீகமும், கொடையும் தான் அழிவைநோக்கி போகிறது.

சங்க கால மன்னரின் தலைநகருக்கே இந்த நிலையென்றால், வரும்காலத்தில்.......................................................????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக