சித்தர்கள் பிரம்மசாரிகளா



பொதுவாகவே சித்தர்கள் ஆசைப்பட்டது ஆசையே இருக்ககூடாது என்பது அல்ல.

ஆசைக்கு அடிமையாக கூடாது என்றும். ஆசை தேவையுள்ளது தானா என அறியவைப்பதும் தான்

சித்தர்கள் வழிபடும் தெய்வம் அவர்களுக்கு நிர்வாணமாக தான் காட்சிதரும் என கூறுகிறார்கள்.

அப்படி காட்சிகரும் கடவுளர்களை பார்த்த சித்தர்களுக்கு ஒரு பெண் நிர்வாணமாக எதிரில் வந்தாலும் காமமாக பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால் அவர்கள் சித்தர்கள் இல்லை.

அது மட்டுமல்ல சித்தர்கள் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பார்கள்.  என்று கூறுவது சுத்த பொய். திருமணமாகி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் தான் சித்தர்கள் முழுமையடைகிறார்கள். அதில் மிக சிலர் மட்டும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
இதோ காகபுஜன்டர சித்தர் அவர் மனைவியுடன்

சித்தர்கள் வாழ்வில் கற்புக்கு முக்கியதுவம் தந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆக சித்தர்கள் காமாந்தகர்கள் அல்ல. ஆனால் இன்று காமாந்தகர்கள் சித்தர்கள் போர்வையில் திரிகிறார்கள். ஜாக்கிரதை.

இன்று உள்ள இந்த ஆனந்தா வகையறாக்களை நான் சொல்லவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக