ஐசு, ஐசு....................

ஐஸ்வர்யா ராய் இது இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஓர் மந்திரவார்த்தையாக தான் இருந்தது.

இந்த பெயரை கேட்டாலே வடிவேலு ஒரு படத்தில் ஐஸவர்யாராய அம்மாவாக்கி அவங்க அம்மாவ மாமியாராக்கனும்னு சொல்ற காமடி தான் நினைவுக்கு வருகிறது.

இந்த படத்தை பார்த்தால் அதே வடிவேல் அந்த வார்த்தையை சொல்லியிருப்பாரா என்பது சந்தேகம் தான்...

ஆக மொத்தம் மனதை பார்த்து கல்யாணம் செய்வது என்ற நிலைப்பாடு காணாமல் போய்விட்டது.

முன்பெல்லாம் பெண்ணை மணமகனுக்கு கண்ணில் காட்டாமல் நல்ல மனசு பெண் என்றும் நல்ல அழகு என்றும் மணமகனின் தாயார் சொல்லி திருமணம் செய்தார்கள்.

இன்று அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

என்றும் நிலையில்லாதது இந்த அழகு என்று தெரிவிப்பதற்கு இந்த ஐசே உதாரணம்,

உடல் பருமனாகிவிட்டது என்பதற்கு இது அழகு இல்லை என்று ஆகிவிடாது. இருந்தாலும் அந்த ஒல்லியாக தேகத்தையும், அந்த கண்ணையும் அழகு என்று சொன்னவர்கள், அந்த ஒல்லி தேகத்தை தேடவேண்டிய கால கட்டத்தில் உள்ளார்கள்.

ஆக புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முக்கியத்துவம் தாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக