சர்க்கஸ்காரர்கள்

கரணம் தப்பினால் மரணம் இது தமிழ் பழமொழி.

இன்று நாம் பலர் நம் வாழ்க்கையை இப்படி தான் நகர்த்திகொண்டிருக்கிறோம்.

ஆனாலும் மயிலாடுதுறையில் கூடாரம் அடித்திருக்கும் சர்க்கஸ்காரர்களை பார்த்தால் இது உண்மை என்று தெரியவரும்.

பிறரை சந்தோஷப்படுத்த தன் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள்.

அப்படிபட்ட சர்க்கஸ் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை தான்.
சினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு கரகோஷம் எழுப்பி ரசிகர் மன்றம் வைக்கும் நாம் இவர்களை சட்டை செய்வதில்லை தான்.

பிறர் சந்தோஷத்திற்காக உடலை வருத்தி உழைக்கும் இவர்களை பாராட்டாமல் இருக்கலாமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக