போலி பாராட்டுக்காக


எமது நண்பர் திரு. எக்ஸ் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை அப்படியே முழம் நீட்டுக்கு நீட்டி முழக்குவார். அவருக்கு பெரிய கல்கி, அல்லது சாண்டில்யனோ என்று நினைப்பு. சொல்ல வேண்டியதை அப்படி வர்ணித்து பேசுவார். அது அவருடைய இயல்புதான் என்று நான் கவலை படுவதே இல்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்னை அப்படி சிந்திக்க வைத்துவிட்டது. அது என்னவென்றால் சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அதை பெலிக்ஸ் அப்படி தத்துருபமாக விளக்கி சொன்னார்.

அது என்னவென்றால் பெலிக்ஸ் சாலையோரத்தில் நடந்து வரும் போது அவருக்கு அருகில் ஒருவரோடு பேசிக்கொண்டு வந்ததாகவும். அவர் உலக விசயம் பற்றியும், அரசியல் பற்றியும் அருமையா பேசிக்கொண்டுவந்ததாக கூறினார். திடீரெண்டு எதிரில் வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ கார் தான் வாங்க ஆசைப்பட்ட கார் அதுவெண்டும் கூறினார். சரி என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த கார் மிக அழகாக இருந்தாகவும் கூறினார். அந்த கார் அவர் அருகில் பேசிக்கொண்டு வந்தவரை மோதி தூக்கி எறிந்ததாகவும். மோதப்பட்ட அவர் அரை பனைமர உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாகவும் கூறினார். நான் மிக ஆர்வமாக பிறகு என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர் தூக்கி எறியப்பட்ட அவர் அடிப்பட்டு அங்கேயே கிடப்பதாக கூறினார்.

அதற்கு நான் ஏன் அப்படியே அவரை விட்டுவிட்டு வந்தாய் என்றும் அவருக்கு சம்பந்தபட்டவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது தானே அது அவருக்கு உதவியாக இருக்குமே என்று கேட்டேன்.

அதற்கு பெலிக்ஸ் சொன்னார் அதனால் தான் இதை உன்னிடம் சொல்கிறேன் என்றார். எனக்கு மனம் அதீம பதைபதைப்புடன் இருந்தது. மீண்டும் கேட்டேன் என்ன சொல்கிறாய். தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல் என்றேன்.

அதற்கு பெலிக்ஸ் அவர் உன் கடையில் வேலை பார்க்கும் நபர் என்று அவர் பெயரை சொன்னார். உடனடியாக அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றேன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

இருந்தாலும் பெலிக்ஸ் வந்த உடனே அடிபட்டவர் உன் கடைஆள் என்று சொல்லியிருந்தால் விரைந்து சென்றிருக்கலாம். அதைவிட்டு போலி பாராட்டுக்காக இப்படி நேரத்தை விரையம் செய்த பெலிக்ஸ் மீது கடுப்பில் தான் இருக்கிறேன்.

அதை போல் எனது நண்பரின் அம்மா தனது வீட்டில் தொலைகாட்சி பெட்டி பழுதானால் அதை என்னவோ உயிர் போகும் பிரச்சினை போல் அவ்வளவு உணர்வுபூர்வமாக சொல்வார்கள். அதே அவருடைய கணவர் உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார். அதை அவர் சிரிப்பாக சொல்கிறார்கள். என்னவென்று சொல்ல நேரவிரையம் செய்தும் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தெரியாத ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக