பெண் தேடும் படலம்

”என் பெயரோ கல்யாணராமன் மங்களகரமான பெயர். ஆனால் எனக்கோ இன்னம் திருமணம் ஆகவில்லை” இது என் நண்பனின் புலம்பல்.
இதில் வேறு அவனது கோபம் எல்லாம் அவனது ஜாதகத்தின் மீது தான்.

எவண்டா இந்த ஜாதகம் ஜோசியம் அப்படிங்கறத கண்டுபிடிச்சது. என்பதே.

இந்த கல்யாணராமனுக்கு என்ன தான் பிரச்சினை என்று பார்த்தால் இவன் பிறந்த நேரம் ஒரு நிமிடம் தாண்டினால் செவ்வாய் தோஷம் இல்லை.

அவனது ஜாதகத்தில். இந்த லட்சனத்தில் அவன் பிறந்தது இந்த நேரம் தான் என்று அவன் அப்பா சொல்கிறார் அவன் பாட்டியோ இல்லை அவன் 3 நிமிடம் கழித்து தான் பிற்ந்தான். 3 நிமிடம் கழித்தால் தோஷம் கிடையாது. இது தான் அவன் பிரச்சினையே.

நான் கூட கேட்டேன் அது எப்படி டா மாறும் என்று. அதற்கு அவன் சொன்னது புத்தரின் கதை எனக்கு என்னவோ போல் இருந்தது. இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா என்று

அது என்ன கதை என்றால்

புத்தர் பிறந்த போது மாடியில் இருந்து ஒரு முத்தை எடுத்து கீழே போட்டார்களாம். அந்த முத்து ஒரு கதவின் மீது பட்டு கீழே விழுந்ததாம். கீழே விழுந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்தவர்கள் சொன்னது இவர் பெரிய சக்ரவத்தி ஆவர். உலகத்தையே ஆள்வார் என்பது. ஆனால் கதவில் பட்ட ஓசையை கேட்டு ஒருவர் எழுதிய ஜாதகப்படி புத்தர் பெரிய ஞானி ஆவார். உலகத்தில் இவர் ஆண்மீகவாதியாக பற்றற்று இருப்பார் என்பது தான்.

இப்படி இருக்க சரியான பிறந்த நேரம் இல்லாமல் என் நண்பர் கல்யாணராமன் கவலைபடுவது சரிதான் என்று தோன்றியது.

இருப்பினும் ஜாதகம் பார்க்காமல் நேரம் பார்க்காமல் எத்தனையோ பேர் திருமணம் செய்திருக்கிறார்கள் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் இது ஒரு புரியாத புதிராக இருந்தாலும்.

இந்த கதை எனக்குள் ஒரு புரிதலை உண்டாக்கியது.

உலகத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் சரியாகதான் ஜாதகம் குறிக்கப்பட்டுள்ளதா. அறுவைசிகிச்சை மூலம் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது என்பதே.

ஆக இந்த ஜாதகம் ஜோசியம் பார்க்காமல் நடந்த திருமணம் நல்லதாகவே இருக்கும்பட்சத்தில் ஏன் இந்த திருமண பொருத்தமும். ஜாதகமும்.

இன்று கல்யாணராமன் காதலித்த செவ்வாய்தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய தீர்மாணித்துவிட்டார். அவர் எண்ணம் நடக்க வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக