அச்சுக்கலை


தமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.
அது பின்வருமாறு

இயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்
இசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்
நாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.

இருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.

நவீன உலகின் புதிய முறை எனலாம்.

இந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.

ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.

பாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.

போர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.

மாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுசார் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.

பேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.

இந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,

அச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.

இந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உலக பார்வைக்கு

கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்ன போது நம்பாத உலகம், அவரை கேலப்படுத்தி, அவமானபகடுத்தியது.

பிறகு உலகம் உருண்டை என்று நம்பும் போது பைபிளில் உள்ள வாசகம் தவறு என்று ஒப்புக்கொண்டது.

அறிவியல் பூர்வமான நிறுபிக்கட்ட அனைத்தையும் நம்பிய மனிதன், நிறுபிக்கபடாததை கடவுளின் கிருபை என்றும் கடவுளாகவும் கூட நம்பினான் நம்பிக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திற்கும் கூட புதுக்கடவுள் அவதாரம் என்று பெயர் வைத்துவிட்டான்.

அம்மை நோயை மாரியம்மனாகவும், காலரா நோயை காளியம்மனாகவும் நினைக்கும் மக்கள், நோய் வந்தால் மட்டும் பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஆக காலராவை ஒழித்துவிட்டதாக சொல்லும் மருத்துவர்கள்,
காளியம்மனை அழித்துவிட்டார்களா என்ன.

கடவுள் இருக்கிறார் என்றால் அவரை கண்டபடி வேறு எதனோடும் ஒப்பிட்டு கேவலப்படுத்தவேண்டாம்.

ஐசு, ஐசு....................

ஐஸ்வர்யா ராய் இது இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஓர் மந்திரவார்த்தையாக தான் இருந்தது.

இந்த பெயரை கேட்டாலே வடிவேலு ஒரு படத்தில் ஐஸவர்யாராய அம்மாவாக்கி அவங்க அம்மாவ மாமியாராக்கனும்னு சொல்ற காமடி தான் நினைவுக்கு வருகிறது.

இந்த படத்தை பார்த்தால் அதே வடிவேல் அந்த வார்த்தையை சொல்லியிருப்பாரா என்பது சந்தேகம் தான்...

ஆக மொத்தம் மனதை பார்த்து கல்யாணம் செய்வது என்ற நிலைப்பாடு காணாமல் போய்விட்டது.

முன்பெல்லாம் பெண்ணை மணமகனுக்கு கண்ணில் காட்டாமல் நல்ல மனசு பெண் என்றும் நல்ல அழகு என்றும் மணமகனின் தாயார் சொல்லி திருமணம் செய்தார்கள்.

இன்று அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

என்றும் நிலையில்லாதது இந்த அழகு என்று தெரிவிப்பதற்கு இந்த ஐசே உதாரணம்,

உடல் பருமனாகிவிட்டது என்பதற்கு இது அழகு இல்லை என்று ஆகிவிடாது. இருந்தாலும் அந்த ஒல்லியாக தேகத்தையும், அந்த கண்ணையும் அழகு என்று சொன்னவர்கள், அந்த ஒல்லி தேகத்தை தேடவேண்டிய கால கட்டத்தில் உள்ளார்கள்.

ஆக புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முக்கியத்துவம் தாருங்கள்