தப்பா தவறா

ஒரு படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவார். துரோகம் இரண்டு வகைபடும் ஒன்று நமக்கு நாமே செஞ்சிக்கறது. மற்றொன்று நாம் பிறருக்கு செய்வது.

நமக்கு நாமே செஞ்சிக்கிறது. சிகரெட், தண்ணீ, மற்ற போதை பொருட்கள்.

உலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் சைக்கோ என்பது போல் உலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகைக்கு அடிமை தான்.

அடிமைத்தனம் மற்றும் பழக்கவழக்கம் சைக்கோவாகிறது.
அது யாராக இருந்தாலும் சரி. பாரதிக்கு போதை பொருள் பழக்கம் இருந்தது. காந்திக்கு இனிமா கொடுத்துகொள்ளும் பழக்கம் இருந்தது. அது போல் நேருவுக்கும் சிகரெட்.

ஆக உலகில் மனிதன் ஏதோ ஒன்றிற்கு அடிமையாகி கொண்டு தான் இருக்கிறான்.

இந்த பழக்கம் ஆழ்மனதில் ஏற்படுகின்ற இறுக்கத்திற்கு இதுஒரு வடிகால் என்பது உளவியலாளர்கள் கருத்து.

ஆக இது நமக்கு நாமே செய்துக்கொள்ளும் துரோகம் என்றாகாது. சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது தவறு தான். ஆனால் சிகரெட் அளவுக்கு அல்ல என்றாலும் இதுவும் ஒரு சைக்கோதனம் தான்.

இந்த பழக்கத்தால் உடல் தான் பாதிக்கப்படுகிறது. மனம் அல்ல. என்பது பொதுவானதானாலும். உடல் பாதித்தால் மனமும் பாதிக்கும் என்பது பொது கருத்து.

இந்த சைக்கோ தனத்தை கட்டுப்படுத்தினால் அது மற்றோர் பழக்கத்திற்கு தான் எடுத்துசெல்லும்.